என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது- வேல்முருகனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
- எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.
- 'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,
எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார்.
நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பா.ஜ.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்." என ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்ணில், பெண் அமைச்சர் அடக்கமாக இருக்க வேண்டும் என மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.






