என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

50 அடி ஆழ கிணற்றுக்குள் மூழ்கிய வேன்- 5 பேரும் சடலமாக மீட்பு
- வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் வேன் இழுத்துச் சென்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 8 பேருடன் 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆம்னி வேனில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சென்றுக்கொண்டிருந்தபோது, சாலையோரம் கிணறு இருப்பது தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்தது.
வேன் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த வேனில் 8 பேர் பயணித்ததாகவும், அவர்கள் காருக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் 3 பேர் தண்ணீரில் நீந்தி தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதில், கிணற்றுக்குள் சிக்கியுள்ள 5 பேரின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாக இருந்து வந்தது.
கிரேன் கொண்டு மீட்கும் முயற்சி செய்து வந்த நிலையில், ஸ்கூபா டைவிக் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர், 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் வேன் மீட்கப்பட்டது.
இதில், வேனில் சிக்கியிருந்த 5 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மீட்புப் பணி நடைபெற்ற இடத்திற்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்துள்ளார்.






