என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    யு.ஜி.சி. விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா? அன்புமணி கேள்வி
    X

    யு.ஜி.சி. விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா? அன்புமணி கேள்வி

    • பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    • பா.ம.க.வும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    துணை வேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்தில் மாநில உரிமைகளை காக்கவேண்டும் என்பதற்காக பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது நல்ல முயற்சிதான். பா.ம.க.வும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறது.

    அதேவேளையில், சமூகநீதியை காப்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளை அப்பட்டமாக தாரை வார்த்துக்கொண்டிருக்கிறாரே, அந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை எவ்வாறு காப்பது என்பது குறித்து இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள பீகார், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதியாவது கேட்டறிவாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? மாநில உரிமைகளை காப்பதில் யு.ஜி.சி. விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா? எப்போது கலையும் இந்த இரட்டை வேடம்?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×