என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீண்டும் அதிரடி பிரசாரம் தொடக்கம் - விஜய் நாளை மறுநாள் காஞ்சிபுரம் மக்களுடன் சந்திப்பு
    X

    மீண்டும் அதிரடி பிரசாரம் தொடக்கம் - விஜய் நாளை மறுநாள் காஞ்சிபுரம் மக்களுடன் சந்திப்பு

    • சென்னையில் மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.
    • விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரசாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார்.

    வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் த.வெ.க. விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில்,

    விஜய் பிரசாரத்துக்கு முந்தைய நாள் 3-ந் தேதி கார்த்திகை தீபம் விழாவுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்வார்கள். அதே போல் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

    எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் விஜயின் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதற்கிடையே சேலத்தில் விஜயின் தேர்தல் பிரசார கூட்டம் தள்ளிப் போவதால் அதற்கு முன்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் முடிவு செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் விஜயை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார். சென்னையில் இந்த மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்கிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை விஜய் சந்திக்கிறார். இதன் மூலம் விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரசாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார்.

    தமிழகத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வெளியிடப்படாமல் கோர்ட்டு பரிசீலனையில் உள்ளது. இதனால் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி உள் அரங்கில் நடக்கிறது.

    Next Story
    ×