என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

GOLD PRICE TODAY : ஒரே நாளில் 2 முறை உயர்வு - சவரனுக்கு ரூ.5200 உயர்ந்து உச்சம் தொட்ட தங்கம்
- தங்கம் இன்று காலை விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலை அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. முதன் முறையாக கடந்த மாதம் 15-ந்தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர், சற்று குறைந்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது. தங்கம் விலை நேற்றுமுன்தினம் கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2,200-ம் அதிகரித்தது. அதன்படி, கிராம் ரூ.15,025-க்கும், சவரன் ரூ.1,20,200-க்கும் விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680-க்கும் விற்பனையானது.
தங்கம் இன்று காலை விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 370 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும் சவரனுக்கு 2,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






