என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கந்திகுப்பம் அருகே சரக்கு வாகனம் மோதி 10-ம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேர் பலி
- தகவல் அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகன் சக்தி (வயது14).
இவர் மேல் கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மகாராஜா கடை அருகே உள்ள கொத்தூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் பேரரசு (20). இவர் குருவிநாயன பள்ளியில் பாட்டி வீட்டில் இருந்து கொண்டு கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாதவன் (15), இவர்கள் மூன்று பேரும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று இரவு குருவிநாயனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பேரரசு ஓட்டினார். சக்தி, மாதவன் பின்னால் அமர்ந்து சென்றனர்.
அப்போது கிருஷ்ண கிரி-குப்பம் சாலையில் குருவி நாயனப்பள்ளி மசூதி அருகே வந்த போது கர்நாடக மாநிலம், குல்பர் காவில் இருந்து மக்காச் சோளம் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற பிக்கப் வேன் எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பேரரசு, சக்தி, மாதவன், 3 பேரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிக்கப் வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






