என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடமாநில இளைஞர்கள் கொலை வழக்கில் மூன்று பேர் அதிரடி கைது
    X

    வடமாநில இளைஞர்கள் கொலை வழக்கில் மூன்று பேர் அதிரடி கைது

    • கொல்லப்பட்ட இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
    • உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் மூன்று வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக வெப்படை அருகே வடமாநில இளைஞர்கள் இருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா மற்றும் துகிலேஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வடமாநில இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் விசாரணை மேற்கொண்டார்.

    சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். எதற்காக கொலை நடைபெற்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், கொலை வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜன் லகுரி, மான்சிங் காக்ராய் மற்றும் தஸ்ரத் பேடிங் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×