என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விடியா மூஞ்சிக்கு விடியாத ஆட்சி மாதிரி தான் தெரியும்- இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலடி
- சினிமாவ சும்மா பார்க்கல. நாம காசு கொடுத்து பார்க்குறோம்.
- கட்சித்தான் ஞாபத்தில் இருக்கணுமே தவிர நடிகர்கள் ஞாபகத்துக்கு இருக்கக்கூடாது.
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர்:-
நடிகர் எல்லாம் அரசியலுக்கு வரஆரம்பித்து விட்டார்கள். சினிமா பார்த்தோமா, வந்தோமா, அத அங்கேயே மறந்துவிட வேண்டும். சினிமாவ சும்மா பார்க்கல. நாம காசு கொடுத்து பார்க்குறோம். ரசித்தோமா அதோடு பார்த்துவிட்டு வெளியே வந்திடணும். அதுக்கப்புறம் கட்சித்தான் ஞாபத்தில் இருக்கணுமே தவிர நடிகர்கள் ஞாபகத்துக்கு இருக்கக்கூடாது.
எடப்பாடி பழனிசாமின்னு ஒருவர் இருக்கிறார். அவர் இது விடியாத ஆட்சி... விடியாத ஆட்சி...ன்னு சொல்றாரு. என்ன விடியல. விடியா மூஞ்சிக்கு விடியாத ஆட்சி மாதிரி தான் தெரியும் என்றார்.






