என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் - வானிலை ஆய்வு மையம்
    X

    சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் - வானிலை ஆய்வு மையம்

    • வேலூரில் நேற்று 103 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.
    • 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும்.

    சென்னையில் இன்று 100 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நேற்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் சேலத்தில் நேற்று 104 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.

    மதுரை நகர் பகுதியிலும், ஈரோட்டிலும் 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்திலும், வேலூரிலும் நேற்று 103 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.

    தருமபுரி, கரூர் பரமத்தி மற்றும் திருச்சியில் நேற்று 102 டிகிரி வெயில் பதிவானது. கோவை மற்றும் திருத்தணியிலும் 100 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலையில் 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலையால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலையை நீடிக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 செல்ஷியஸை ஒட்டியும் குறைந்தபட்சம் 27 டிகிரி வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×