என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    SSLC | தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது
    X

    SSLC | தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது

    • தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
    • தேர்வு பணியில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறுவதால் அரசு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அரசு, தனியார் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக பெயர் படுத்தப்பட வேண்டிய நிலை இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இந்தத் தேர்வு 4219 மையங்களில் நடக்கிறது. பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 82 ஆயிரம் பேரும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேரும் என மொத்தம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதினார்கள்.

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் பொதுத்தேர்வினை 49 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு கூடங்களில் மாணவ மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் பறக்கும் படை அவ்வப்போது வந்து கண்காணித்தனர்.

    முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக தேர்வினை எழுதினார்கள். ஒவ்வொரு தேர்விற்கும் குறிப்பிட்ட கால இடைவெளி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் படித்ததை மீண்டும் மறு ஆய்வு செய்து தேர்வு எழுதுவதற்கு வசதியாக இருந்தது. இன்று தொடங்கியுள்ள தேர்வு ஏப்ரல் மாதம் 6 தேதி வரை நடைபெறுகிறது.

    சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகள், தேர்வு எழுத முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிக்கல்வி அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையில் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் தேர்வினை முறையாக நடத்தி முடிக்க தேர்வுத்துறை அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து இருந்தது.

    Next Story
    ×