என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார் - ஸ்ரீகாந்த் வாக்குமூலம்
    X

    அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார் - ஸ்ரீகாந்த் வாக்குமூலம்

    • 2 முறை பயன்படுத்திய பின்னர், 3-வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலை ஏற்பட்டது.
    • புழல் சிறையில் உள்ள பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் எனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை உள்ளது எனக்கூறி ஜாமின் வழங்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார். 'தீங்கிரை' என்ற படத்திற்காக பிரசாத் தனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டி இருந்தது. பணத்தைக் கேட்கும் போதெல்லாம் பிரசாரத் கொக்கைன் வாங்கித் தருவார். 2 முறை பயன்படுத்திய பின்னர், 3-வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலை ஏற்பட்டது. வேறொரு வழக்கில் பிரசாத்தை கைது செய்வதற்கு முன்பு கால் கிலோ கொக்கைன் தந்ததாக ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், 8 முறை போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் பப்-ல் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி என மொத்தம் 5 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் பிரசாத் உள்ளார்.

    புழல் சிறையில் உள்ள பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்பின் இவ்வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டலாம் என கூறப்படுகிறது.

    Next Story
    ×