என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரிப்பன் மாளிகை போராடும் இடம் அல்ல..! மேயர் பிரியா
- பணியில் சேர்ந்த பின்னர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
- தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி தூய்மை பணியாளர்கள், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மேயர் பிரியா போராட்டம் குறித்து கூறியதாவது:-
* சென்னை ரிப்பன் மாளிகை போராட்டம் நடத்தும் இடம் அல்ல. போராடுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம்.
* அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசாரிடம் அனுமதி பெற்ற பின்னர், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.
* பணியில் சேர்ந்த பின்னர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
* கோர்ட் உத்தரவின் அடிப்படையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுவோரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
* 31ஆம் தேதிக்குள் தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள்






