

தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டம் வெடிக்கும் என எக்ஸ் தளத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டிலும் இளைஞர்களின் புரட்சி வெடிக்கும் என பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருந்தார் ஆதவ் அர்ஜூனா.
இதனால், ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளில் பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.