யார் அந்த சார்?... இவ்வாறு பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்- அரசு தரப்பு வழக்கறிஞர்

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரிங்டோன் வந்ததா என கேட்டபோது இல்லை என கூறியுள்ளார்.அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை.
யார் அந்த சார்?... இவ்வாறு பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்- அரசு தரப்பு வழக்கறிஞர்
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

* சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ஞானசேகரனின் செல்போன் பிளைட் மோடில் மட்டுமே இருந்துள்ளது.

* அப்பெண்ணை ஏமாற்ற, பயமுறுத்தவே ஞானசேகரன் செல்போனில் பேசுவது போல் நாடகம் ஆடியது நிரூபிக்கப்பட்டுள்ளது.

* செல்போன் பிளைட் மோடில் இருந்தது தொடர்பாக ஏர்டெல் மண்டல மேலாளர் நேரடியாக வந்து நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார்.

* பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரிங்டோன் வந்ததா என கேட்டபோது இல்லை என கூறியுள்ளார்.

* அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை.

* ஞானசேகரனின் செல்போன் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையாகவும், அதிகாரிகள் நேரடியாகவும் சாட்சி அளித்துள்ளனர்.

* இன்னும் இந்த வழக்கில் வேறு சிலர் இருப்பதாக இனிமேலும் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.

* பெண்கள் துணிந்து வந்து புகார் கொடுக்க வேண்டும், அநீதிக்கு எதிராக பயந்து இருக்கக்கூடாது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com