என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு பகுதியில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
- சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
- கவர்னரின் இந்தச் செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாக கூறி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஈரோடு:
இந்த ஆண்டுக்கான சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் நேற்று தொட ங்கியது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
சட்டமன்றத்துக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
கவர்னரின் இந்தச் செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாக கூறி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தி.மு.க சார்பில் இன்று தமிழக முழுவதும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, ஈரோடு மாநகரில் நகர், பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கெட்அவுட் ரவி எனும் ஹேஷ்டேக்குடன் "தமிழ் நாட்டில் அத்துமீறும் கவர்னர், அவரை காப்பாற்றும் அ.தி.மு.க-பா.ஜ.க. கள்ளக்கூட்டணி" எனும் வாசகங்கள் அச்சிடப்பட்டு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரின் கார்டூன் படங்களுடன் எடப்பாடி பழனிசாமி-கவர்னர் ஆர்.என்.ரவி பேசிக்கொள்வது போல் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளது.






