என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பண்டிகை - மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான தேதிகள் அறிவிப்பு
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
- அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் பங்கேற்றனர்.
அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






