என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் பாமக-வின் இலக்கு: அன்புமணி ராமதாஸ்
- மக்களவை தேர்தலில் 1.25 சதவீதம் வாக்குகள் என்றாலும் 40 எம்.பி.க்களை கொண்டிருக்கிறது திமுக.
- தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதமாக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* என் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது.
* சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைப்போம்.
* மக்களவை தேர்தலில் 1.25 சதவீதம் வாக்குகள் என்றாலும் 40 எம்.பி.க்களை கொண்டிருக்கிறது திமுக
* நம்முடைய குலதெய்வம், வழிகாட்டிதான் ராமதாஸ். அவர் உள்ளத்தில் இருக்கிறார்.
* சில நேரத்தில் சாமிக்கு கோபம் வந்துவிடும். அப்போது திருவிழா எடுக்க வேண்டும்.
* தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதமாக உள்ளது.
* அடுத்த 6 மாத காலத்திற்கு ஒற்றுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும்.
* திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் பாமக-வின் இலக்கு.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.






