என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
    X

    சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

    • திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.

    வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது.

    மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திற்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×