என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் தலைமையில் இன்று பேரணி
- இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளது.
- தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.
சென்னை:
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.
இந்த பேரணி இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது.