என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீண்டும் முதலமைச்சரை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்
    X

    மீண்டும் முதலமைச்சரை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

    • நடைபயிற்சியின்போது சந்தித்து வணக்கம் தெரிவித்து கொண்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை மீண்டும் சந்தித்தார்.

    சென்னை அடையாறு அருகே உள்ள தியோசபிக்கல் சொசைட்டியில் நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கே வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இந்த சந்திப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், நான் நடைபயிற்சி மேற்கொண்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சந்தித்து வணக்கம் தெரிவித்து கொண்டோம் என்று கூறி இருந்தார்.

    இது பல்வேறு யூகங்களை கிளப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை மீண்டும் சந்தித்தார். இந்த சந்திப்பு, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடந்தது.

    ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சரின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும், முதலமைச்சரின் சகோதரர் மு.க.முத்துவின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் ஆகியோர் இருந்தனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் மீண்டும் சந்தித்து பேசினார். இன்று காலையில் அடையாறு தியோசோபிகல் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது 3-வது முறையாக அவர்கள் சந்தித்து பேசினார்கள். சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்றபடியே பேசினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் இன்று 3-வது முறையாக சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    Next Story
    ×