என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பருவமழை ஆலோசனை - சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி நிர்வாகிகளுக்கு தி.மு.க. அழைப்பு
- ஆலோசனைக் கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
- சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர-நகர- பகுதி-வட்டக் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழை ஆலோசனைக்காக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி தி.மு.க. நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நடப்பு பருவமழையின்போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், இளைஞரணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் "சென்னை – தாம்பரம் - ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்-துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்" நாளை காலை 10.00 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர-நகர- பகுதி-வட்டக் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






