பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு

விடைத்தாளின் முகப்புப் பக்கம் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். விடை தாள்களின் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டனர்.
பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு
Published on

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க விடைத்தாள்களின் பராமரிப்புகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேரடியாக மேற்கொள்ள உள்ளது.

மதுரையில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற +2 பொதுத் தேர்வில் விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்றி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விடைத்தாளின் முகப்புப் பக்கம் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

விடை தாள்களின் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டனர்.

தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாவட்டம் தோறும் மையங்கள் அமைத்து விடைத்தாள்களுடன் அதன் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

பொதுத் தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டிருக்கும் வகையில் வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com