என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
சாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்! - மு.க.ஸ்டாலின்
- சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!
சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்!
இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - பாராளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story








