என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை - மு.க.ஸ்டாலின்
    X

    எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை - மு.க.ஸ்டாலின்

    • இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும்.
    • எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும்.

    * எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லாததால் தி.மு.க.வை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

    * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    * எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

    * எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. எங்க வேலையை நாங்கள் பார்க்கிறோம்.

    * எப்போதும் எங்களுக்கு மனசு நல்லா இருக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×