என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது.
- SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
* தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது.
* பா.ஜ.க.வின் வாக்குத்திருட்டு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி உள்ளார்.
* SIR பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
* மக்களின் வாக்குரிமையை பெற்றுத்தரும் பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.
* ஏற்கனவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் பாக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
* SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.
* தமிழ்நாட்டில் உரிய கால அவகாசம் இல்லாமல் SIR பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
* SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க. பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும்.
* தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்க மாநிலம் SIR-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகிறது.
* மக்களை சந்திக்க தெம்பில்லாமல் SIR என்ற குறுக்கு வழியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றது வெட்கக்கேடு.
* தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சி தற்போது எதிர்க்கட்சியாக இல்லை.
* அ.தி.மு.க.வை டெல்லியில் அடகு வைத்துவிட்டு SIR-ஐ ஆதரித்து பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






