என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்- நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார்.
- அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார். அதில் கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டி தேர்தல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும், உள்கட்சி விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலசப்பாக்கம், அரக்கோணம், சோளிங்கர் ஆகிய 3 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியாக (ஒன் டூ ஒன்) வரவழைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதுவரை 49 நாட்களில் 112 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கள நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.






