என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்
- தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டினார்.
- வைகோவை கண்டித்து மல்லை சத்யா இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது.
சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.
இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக மல்லை சத்யா அறிவித்து இருந்தார்.
அதன்படி வைகோவை கண்டித்து மல்லை சத்யா இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்.
தனது போராட்டத்தை தொடங்கும் முன்னர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மல்லை சத்யா மரியாதை செலுத்தினார்.






