லாக் அப் மரணங்கள்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்த விஜய்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய் ஆறுதல்.தவெக தலைவர் விஜய் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.
லாக் அப் மரணங்கள்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்த விஜய்
Published on

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்தார்.

தவெக தலைவர் விஜய் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் வந்தனர். அங்கு, விஜய் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர் நிதியுதவியும் வழங்கியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளார்.

அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவதாக விஜய் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், தீர்ப்பும் வாங்கி தர வேண்டியது என் கடமை.

மனித உரிமைகள் ஆணையத்தில் தவெக சார்பில் சட்ட போராட்டம் நடத்தி நீதியை பெற்றுத் தருவோம்.

வழக்குக்கான செலவை தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்" என விஜய் உறுதி அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com