என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு கோரிக்கை - மத்திய அரசு குழு அமைப்பு
    X

    நெல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு கோரிக்கை - மத்திய அரசு குழு அமைப்பு

    • தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கோரி கோரிக்கை

    வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளது. ஆதலால் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17%-ல் இருந்து 22% ஆக தளர்த்த வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு குழுக்கள் அமைத்துள்ளது. மத்திய உணவுத் துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் குழுக்கள் உடனே தமிழ்நாடு வந்து நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்வார்கள் எனவும் இந்த குழு பரிந்துரையின் அடிப்படையில் ஈரப்பதத்தில் தளர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×