என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    • ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இன்று மதியம் மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Live Updates

    • 29 Nov 2024 5:50 PM IST

      ஃபெங்கல் புயல் எதிரொலியால் கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 5:49 PM IST

      கனமழை எச்சரிக்கையால், சென்னை அரும்பாக்கம், பரங்கிமலை மெட்ரோ ரெயில் பார்க்கிங்கை இன்று மாலை முதல் நாளை மாலை வரை வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • 29 Nov 2024 5:24 PM IST

      வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவானதன் எதிரொலியாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

      ஃபெங்கல் புயல்- மின்சேவை, மின் தடைக்கு 24 மணி நேரமும் செயல்படும் புகார் எண் அறிவிப்பு

    • 29 Nov 2024 5:17 PM IST

      புதுச்சேரியை நெருங்கும் ஃபெங்கல் புயலால் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 4:52 PM IST

      கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

    • 29 Nov 2024 4:51 PM IST

      பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 4:49 PM IST

      நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 4:44 PM IST

      சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 4:42 PM IST

      ஃபெங்கல் புயல் எதிரொலியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 29 Nov 2024 4:14 PM IST

      நாகையிலிருந்து தென்கிழக்கே 260 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 270 கி.மீ., தொலைவில் ஃபெங்கல் புயல் மையம் கொண்டுள்ளது.

    Next Story
    ×