என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுத்தால் அன்புமணியின் தலைவர் பதவி தப்புமா?
- பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை ராமதாஸ் திரட்டி வருகிறார்.
- யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் பா.ம.க. நிர்வாகிகள் குழப்பம்.
சென்னை:
பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சத்தை அடைந்து உள்ளது.
தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு தலைவர் பதவியையும் தானே ஏற்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் அறிவித் தார். இதனால் தலைவர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் ஏற்பட்டது.
இந்த நிலையில் பொதுக் குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் கமிஷனாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். எனவே நானே தலைவராக நீடிக்கிறேன் என்று டாக்டர் அன்புமணி அறிவித்தார்.
இதை அடுத்து இருவரையும் சமாதானப் படுத்தும் முயற்சியில் ஜி.கே.மணி, பு.தா.அருள் மொழி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் கட்சி தொடர்பாக நான் எடுத்த முடிவு உறுதியானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் தான் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.
ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி தனது தலைவர் பதவிக்கு அங்கீகாரம் பெற்று விட்டால் அன்புமணியின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை அவர் திரட்டி வருகிறார்.
அதே நேரம் தந்தை ஏற்பாடு செய்துள்ள அந்த பொதுக்குழுவுக்குயாரையும் செல்ல விடாமல் தடுப்பதில் அன்புமணி ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். இதனால் யார் சொல்வதை கேட்பது? என்று தெரியாமல் பா.ம.க. நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு இளை ஞர் அணி தலைவர் பதவி கொடுத்ததை அன்புமணி விரும்பவில்லை. அதை வெளிப்படையாகவே எதிர்த்தார். அதனால்தான் இந்த மோதலே உருவானது.
நேற்று முகுந்தன், அன்புமணி வீட்டுக்கு சென் றார். தாத்தா ராமதாசை சமாதானப்படுத்த வரும்படி அப்போது அழைப்பு விடுத் தார். ஆனால் இதுவரை ராமதாசை சந்திக்க அன்பு மணி செல்லவில்லை.
ஆனால் திருவிடந்தையில் அடுத்த மாதம் 11-ந்தேதி நடைபெறும் வன்னியர் இளைஞர் மாநாட்டு பணி களை தலைவர் என்ற முறை யில் டாக்டர் அன்புமணி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும் போது, நானே பா.ம.க. தலைவராக இருக்கிறேன். ராமதாசுடன் ஏற்பட்டுள்ள சண்டை உட்கட்சி பிரச்சினைதான் விரைவில் முடியும் என்றார்.
அதே போல் டாக்டர் ராமதாசும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தீவிரமாக செயல்படுங்கள். கட்சியினர் யாரும் சோர்ந்து போக வேண்டாம் என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நீடிக்கும் இந்த மோதல் எப்படி முடியும்? எப்போது முடியும்? என்று தெரியாமல் கட்சி நிர்வாகிகள் தவிக்கிறார்கள்.
சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது, வரும் தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தையை தானே நடத்து வேன் என்பதில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்.
தலைவர் என்ற ரீதியில் அன்புமணி தனியாக சென்று கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது, யாரையும் சந்திப்பது போன்ற வேலைகளில் அன்புமணி ஈடுபட கூடாது என்பதிலும் கறாராக இருக் கிறார். இதற்கு அன்புமணி சம்மதித்தால் விரைவில் சமாதானம் வரும் என் றார்கள்.






