என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் இன்று மாலை முதல் மழை தீவிரமடைய வாய்ப்பு
    X

    சென்னையில் இன்று மாலை முதல் மழை தீவிரமடைய வாய்ப்பு

    • காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நிலவ சாதகமான சூழல் உள்ளது.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு குறைவு.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக, இன்று மாலை முதல் மழையின் தீவிரம் அதிகமாகும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    அதன்படி, சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான பல்வேறு மாவட்டங்களிலும் இன்று மாலை முதல் மழை தீவிரம் அடையும் என கூறப்படுகிறது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நிலவ சாதகமான சூழல் உள்ளது. மேலும் சென்னையில் அதி கனமழை வரை பெய்யக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு குறைவு எனவும் கூறப்படுகிறது.

    தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதலே மழை தொடங்கியிருக்கும் சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை தொடங்கும். அந்த மழையானது படிப்படியாக அதிகரித்து அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழையாக அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×