என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடரும் கனமழை- கோடியக்கரையில் அதிகபட்சமாக 17 செ.மீ. பதிவு
    X

    தொடரும் கனமழை- கோடியக்கரையில் அதிகபட்சமாக 17 செ.மீ. பதிவு

    • தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
    • பள்ளிக்கரணை 8.56, செங்கல்பட்டு 7.5, மகாபலிபுரம் 7.2, புதுச்சேரி 7.55, காரைக்கால் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது

    இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிகழ்வுகள் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை மணலியில் மணலி 13.39, கத்திவாக்கம் 11.19, புழல் 6.95, எண்ணூர் 7.75, மீனம்பாக்கம் 6, பள்ளிக்கரணை 8.56, செங்கல்பட்டு 7.5, மகாபலிபுரம் 7.2, புதுச்சேரி 7.55, காரைக்கால் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாகப்பட்டினம் 16.4, வேளாங்கண்ணி 15, கோடியக்கரை 17, வேதாரண்யம் 13, சீர்காழி 10, திருவாரூர் 9.6, செம்பனார்கோவிலில் 5, அதிராம்பட்டினம் 7.7, கடலூர் 8.8, சிதம்பரம் 7.2, மயிலாடுதுறை 7.1, மயிலம் 7.8, மணல்மேடு 8.05 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×