என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சரக்கு ரெயிலில் தீ விபத்து- ரெயில் சேவையில் மாற்றம்
- தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சதாப்தி விரைவு ரெயில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்றும், மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரெயில் சென்ட்ரல்- அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரெயில், இரவு 7.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 9.05 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அசோகபுரம் செல்ல வேண்டிய காவேரி ரெயில், இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல வேண்டிய ரெயில், இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






