என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் - இ.பி.எஸ். வாக்குறுதி
- பிரதமர் மோடியிடம் தான் முறையிட்ட பிறகே சிபில் ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது.
- அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நெல்லையில் விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள், வியாபாரிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
* பிரதமர் மோடியிடம் தான் முறையிட்ட பிறகே சிபில் ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது.
* தற்போது ஷிப்ட் முறைப்படி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
* சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, அதிக மானியம் பெற்றுக் கொடுத்தோம்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






