என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.விற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவிப்பு - இ.பி.எஸ்.
    X

    தி.மு.க.விற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவிப்பு - இ.பி.எஸ்.

    • 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
    • இன்று தமிழகமே போராட்டகளமாக மாறி உள்ளது.

    சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பாக அ.திமு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். காரணம் அது அ.தி.மு.க.வின் திட்டம்.

    * 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

    * கிட்னி முறைகேடு விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    * என் மீதான புகாரில் நிரபராதி என நிரூபித்து விட்டு தான் நிற்கிறோம்.

    * தேர்தலை நோக்கியே தி.மு.க. அரசு தற்போது பயணப்பட்டு கொண்டிருக்கிறது.

    * தி.மு.க.விற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்துள்ளது.

    * இன்று தமிழகமே போராட்டகளமாக மாறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×