என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா? - இ.பி.எஸ். விளக்கம்
- தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
- கூட்டணி அறிவிப்பின்போதே இ.பி.எஸ். முதலமைச்சராவார் என அமித்ஷா கூறிவிட்டார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
* தி.மு.க. அறிவித்து நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க உள்ளோம்.
* நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது தி.மு.க.
* மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்டத்தின் பிரச்சனைகளை முன்னிறுத்தி மக்களை சந்திப்போம்.
* அ.தி.மு.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து விஜயிடம்தான் கேட்க வேண்டும்.
* கூட்டணி அறிவிப்பின்போதே இ.பி.எஸ். முதலமைச்சராவார் என அமித்ஷா கூறிவிட்டார்.
* தமிழக மக்களின் பேராதரவை பெற்று 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. வரலாறு படைக்கும்.
* நான் சிவகங்கை மாவட்டம் செல்லும்போது அஜித்தின் தாய், தம்பியை சந்தித்து ஆறுதல் கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.