என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதியவர்களுக்கு பதவி- எடப்பாடி பழனிசாமி புது முடிவு
    X

    புதியவர்களுக்கு பதவி- எடப்பாடி பழனிசாமி புது முடிவு

    • கள ஆய்வு கூட்டத்தின்போது தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்க வேண்டும்.
    • தேவையற்றவர்களை கள ஆய்வு கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி வியூகம், அ.தி.மு.க. மேற்கொண்டு வரும் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    நிர்வாகிகளிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவி வழங்குவதில் கவனம் தேவை.

    * மாநில பொறுப்பு வழங்கியதால் தான் கட்சி மாறியது மிகப்பெரிய செய்தியானது.

    * கள ஆய்வு கூட்டத்தின்போது தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்க வேண்டும்.

    * மற்ற மாவட்டங்களில் நடந்ததுபோல சென்னையில் நடக்கக்கூடாது.

    * தேவையற்றவர்களை கள ஆய்வு கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×