என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
- தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது.
சென்னை:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியது குறித்தும், அதனால் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு வருமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருப்பதால், அதுவரை மக்கள் பிரச்சனைகளை வெளியே கொண்டுவந்து போராட்டங்களை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.
Next Story






