என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. அரசைக் கண்டித்து 7-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
    X

    தி.மு.க. அரசைக் கண்டித்து 7-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு

    • பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமல் இருக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்து பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே வருகிற 7-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    பள்ளிக்கரணையில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×