என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிய கார் வாங்கி தரவில்லையா? - த.வெ.க. மாநாட்டில் சேதமடைந்த காரின் உரிமையாளர் விளக்கம்
    X

    புதிய கார் வாங்கி தரவில்லையா? - த.வெ.க. மாநாட்டில் சேதமடைந்த காரின் உரிமையாளர் விளக்கம்

    • கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது.
    • கார் வாங்கி தரவில்லை என தினேஷ் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    மதுரையில் கடந்த மாதம் 21-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு திடலில் த.வெ.கவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. அப்போது கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்ற போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    ஆனால் கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதையடுத்து காரின் உரிமையாளருக்கு புதிதாக கார் ஒன்று வழங்கப்படும் என த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இச்சம்பவம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கார் வாங்கி தரவில்லை என தினேஷ் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    இந்த நிலையில், கட்சி மேலிடத்தில் பேசி, என் காரை என் விருப்பப்படி தயார் செய்திருக்கிறார்கள். விஜய் கையால் வண்டியை வாங்க வேண்டும் என்று குடும்பத்தோடு காத்திருக்கிறேன். இழந்த காரை விட நல்லகார்தான் எனக்கு கிடைக்கிறது. நான் வேதனையடைந்திருப்பதாக செய்திகள் பரப்புகின்றனர். அது உண்மையில்லை என தினேஷ் கூறியுள்ளார்.

    Next Story
    ×