என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
    X

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
    • தமிழகத்திற்கு வரும் 17-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.

    மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

    இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று மற்றும் 16, 18-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்திற்கு வரும் 17-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    Next Story
    ×