என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை மாணவி சம்பவத்தில் கைதான 3 பேர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன -  மாநகர காவல் ஆணையர்
    X

    கோவை மாணவி சம்பவத்தில் கைதான 3 பேர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன - மாநகர காவல் ஆணையர்

    • போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.
    • பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.

    கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டோம்.

    * சந்தேகத்திற்கு இடமானவர்கள் வெள்ள கிணறு பகுதியில் பதுங்கி இருந்தனர்.

    * போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.

    * கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

    * கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிவகங்கையை சேர்ந்தவர்கள், 15 ஆண்டுகளாக கோவையில் உள்ளனர்.

    * சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை, திருட்டு வழக்குகள் உள்ளன.

    * சம்பவ இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 3 பேரும் கல்லை கொண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம்பெண்ணை தூக்கி சென்றனர்.

    * கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை தூக்கிச்சென்றனர்.

    * பிடிபட்ட மூவரில் 2 பேர் இருவரும் பிணையில் வெளியில் வந்துள்ள குற்றவாளிகள்.

    * கைது செய்யப்பட்ட சதீஸ், கார்த்தி ஆகியோர் சகோதரர்கள். குணா என்பவர் அவர்களது உறவினர்.

    * சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் 3 பேரும் சிக்கி உள்ளனர்.

    * பிருந்தாவன் நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணி சென்றுள்ளனர். அதன்பின்னர் தான் சம்பவம் நடந்துள்ளது.

    * இரவு 10.30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

    * கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த இடத்திற்கு 15 நிமிடத்திலேயே சென்றாலும் போலீசாரால் உடனடியாக கண்டறிய இயலவில்லை.

    * பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.

    * பிடிபட்டுள்ள 3 பேரும் கூலிப்படையுடன் தொடர்புடைய நபர்களாகத் தெரியவில்லை. விசாரணைக்குப்பின் தெரியவர வாய்ப்பு உள்ளது.

    * 3 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×