என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை: பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்
    X

    அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை: பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

    • புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
    • புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

    ஆங்கில புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று இரவு மரியாதை செலுத்தினர்.

    அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்பட பலர் உள்ளனர்.

    முன்னதாக ஆங்கில புத்தாண்டு பிறப்பை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் பூங்காக்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகஙகள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் அதிகளவு மக்கள் சுற்றி பார்த்தனர். புத்தாண்டு விடுமுறை தினமான நேற்று ஒரே நாளில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    Next Story
    ×