என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
- இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முதலமைச்சர் தலைமையில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நீலகிரி, கோவை, தேனி, குமரி மாவட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
கடலோர மாவட்டங்களில் அதீத கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பருவமழையால் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.






