என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பஞ்சப்பூரில் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.
திருச்சி:
திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகாமையில் ரூ.129 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த முனையத்தின் முன்புறம் பேரறிஞர் அண்ணா நிலையையும் அவர் திறந்துவைத்தார். இந்த கனரக வாகன சரக்கு வாகன முனையம் 8 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 250 கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 102 இருசக்கர வாகனங்கள் 46 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் இங்குள்ள வணிக வளாகத்தில் தரைதளத்தில் 51 கடைகளும் முதல் தளத்தில் 28 கடைகளும் உள்ளது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.
இதிலும் தனியாக 19 சிறுநீர் கழிப்பிடம் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 27 சதுர மீட்டர் பரப்பளவில் பாதுகாவலர் அறை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு பிரம்மாண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 14 படுக்கை வசதிகள் இடம் பெற்றுள்ளது 16 குளியல் அறைகள் உள்ளன. மேலும் 13 மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்குமான கழிவறை வசதிகள் கூடுதலாக இந்த கனரக சரக்கு வாகன முனையம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் 107 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கனரக வாகன நிறுத்துமிடங்களை அறிவிப்பு செய்யும் வசதி, பாஸ்ட்டேக் மூலம் வசூல் செய்யும் வசதி, தொழில்நுட்ப காரணிகள் மற்றும் பசுமை புல் வெளி போன்றவை இடம்பெற்றுள்ளது.






