என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு மதுரை போலீசார் அனுமதி
    X

    நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு மதுரை போலீசார் அனுமதி

    • தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரிலா் பிரசாரம் மேற்கொள்கிறார்.
    • முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத்தை 12ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறார்.

    கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க.வின் பரப்புரை பயணத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் மற்றும் பிரசார பயணங்களில் பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    கரூர் சம்பவத்துக்கு பிறகு மதுரையில் வருகிற 12-ந்தேதி பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்துக்கு மதுரை போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி தனது பிரசார பயணத்தை மதுரையில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் அவர் தனது முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத்தை மதுரையில் தொடங்கி 5 நாட்கள் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டு உள்ளார்.

    இதற்காக மதுரையில் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடத்த பழங்காநத்தம் ரவுண்டானா, முனிச்சாலை சந்திப்பு, புதூர் பஸ் நிலையம், அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் ஏதாவது ஒன்றை தருமாறு போலீசிடம் பா.ஜ.க.வினர் கேட்டுள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் புதூர் பஸ் நிலையம் அல்லது பழங்காநத்தம் ரவுண்டானா பகுதி பா.ஜ.க. பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தொடங்கி வைத்து பேசுகிறார்.

    இந்த பிரசார பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூடுகிறார்கள். தொடக்க நிகழ்ச்சி முடிந்ததும் நயினார் நாகேந்திரன் சிவகங்கை மாவட்டத்திற்கு செல்கிறார்.

    Next Story
    ×