சென்னையில் மாமூல் தர மறுத்ததால் பெண் வெட்டி கொலை

வெட்டிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மாமூல் தர மறுத்ததால் பெண் வெட்டி கொலை
Published on

சென்னை:

சென்னை திருவொற்றியூரில் மாமூல் தர மறுத்ததால் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற கணவருக்கும் சராமரி வெட்டு விழுந்துள்ளது.

வெட்டிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

போதையில் மாமூல் கேட்டு மிரட்டிய நிலையில், தர மறுத்ததால் வெட்டியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com