என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது- இந்திய வானிலை ஆய்வு மையம்
- காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
- தமிழகத்தில் 18-ந்தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி 48 மணி நேரத்தில தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 16, 17 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 18-ந்தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
லட்சத்தீவு, மாலத்தீவுகள் பகுதியில் மற்றொரு தாழ்வுப்பகுதி நிலவுவதாக தெரிவித்துள்ளது.
Next Story






