என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக உட்கட்சி விவகாரம்: உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
    X

    அதிமுக உட்கட்சி விவகாரம்: உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

    • இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதாக தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு.
    • ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் முடியும் வரை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற வழக்குகளை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவததை எதிர்க்கும் மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழலில் தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது. ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    Next Story
    ×